ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி - ஓபிஎஸ் மனு மீது இன்று விசாரணை
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி நடத்தலாம் என அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்றும், அதைத் தவிர்த்து புதிதாக தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது கட்சி விதிகளை திருத்தவோ கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JOd4hMA
via
Post Comment
No comments