கோவை | பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு - காவல் ஆணையர் தகவல்
கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்தவர் தியாகு(35). இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்மநபர்கள் தீ வைத்தனர். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. அதேபோல், குனியமுத்தூரில் உள்ள ஞானபுரத்தை அடுத்த சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகர். கடந்த 23-ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் மீது விழுந்து தீ்ப்பிடித்தது. இதில் கார் எரிந்து சேதமடைந்தது. மேற்கண்ட இரு வழக்குகள் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xWoRvS8
via
No comments