ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை - டிஜிபிக்கு பாதுகாப்பு அதிகாரி கடிதம்

சென்னை: ஆளுநரின் பணிகளை தடுக்கும் நோக்கத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதினத்துக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். அப்போது, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உட்பட 73 பேர், மயிலாடுதுறை சாலை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்பு கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4dXeT2Q
via

No comments