Breaking News

கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

கோவை: கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று (அக்.26) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கி உள்ளதை, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இறந்த நபர் தீவிரவாதிகளின் நெருங்கிய நபர். தமிழக அரசு பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை. பயங்கரவாதத்தின் ஆணிவேரை தோண்டி எடுத்து அகற்றும் வரை ஆபத்து சூழ்ந்தே இருக்கும். இதை மனதில் கொண்டு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kNwEdvr
via

No comments