Breaking News

தடைக்கு பிறகும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து விளையாடப்படுவதை தடுக்க விபிஎன் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பிரிஃபயர் விளையாட்டுக்கு அடிமையாகி மாயமான இளம் பெண் ஒருவரை மீட்கக்கோரி அவரது தாயார் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள் பலர் பிரிஃபயர் போல் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தங்களின் குழந்தைகளும் அடிமையாகியிருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HRpBhzO
via

No comments