Breaking News

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலப்பாளையத்தில் 4 வீடுகளில் போலீஸார் சோதனை

திருநெல்வேலி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் மாநகர காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக காவல் துறையினரும் பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iM7muOz
via

No comments