`முதல்வரின் முகவரி துறை' செயல்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: ஓராண்டில் 36 லட்சம் மனுக்கள்
சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில்அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பது `உங்கள் தொகுதியில் முதல்வர்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் அளித்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த துறைகள் மூலம் தீர்வு காணப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xHURWug
via
No comments