Breaking News

காஞ்சிபுரம் | அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ ஊழியர் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு: அமைச்சர்கள் ஆறுதல்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே பேருந்தின் பக்கவாட்டில் கல்குவாரி லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவப் பணியாளர் உட்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாகச் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை படூர் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்து சிறுமயிலூர் அருகே வந்தபோது எதிரே வந்த கல்குவாரி லாரி பேருந்தின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z320YWr
via

No comments