Breaking News

தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்

நாகப்பட்டினம்: தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அபிநயா என்ற மாணவி 100-க்கு97 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4SREu0d
via

No comments