Breaking News

ஊர்தோறும் அம்பேத்கர் நூலகம் ஏற்படுத்த விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

சென்னை: ஊர்தோறும் அம்பேத்கர் நூலகம் ஏற்படுத்தும் பணிக்கான ஒருங்கிணைப்புக் குழுவை விசிக தலைவர் திருமாவளவன் அமைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் 2.0 திட்டத்தின்படி சட்ட மேதை அம்பேத்கர் கருத்துகளைத் தொகுத்து 50 நூல்களை உருவாக்குதல் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் நூலகம் அமைத்தல் ஆகிய திட்டத்தை 6 ஆயிரம் கிராமங்களில் கொண்டுசேர்க்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இதனை மேற்கொள்வ தற்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TbocaG1
via

No comments