அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
புதுடெல்லி: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கட்சி உறுப்பினர்களால் தேர்தல் மூலமாக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பான விசாரணை ஜன. 5-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7bJ514l
via
No comments