சிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் - திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் புகார்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் கருத்துகேட்பு கூட்டம் பழைய நகராட்சி கட்டித்தில் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் நடைபெறும் மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அதிகாரிகள் மீது லஞ்ச புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த மாத கவுன்சில் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் கவுன்சிலர்கள் உடனான கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iLdy1HG
via
Post Comment
No comments