Breaking News

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் சர்ச்சை: கரூர் ஆட்சியர் விளக்கம்

கரூர்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஊழியர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் வாசகங்கள் மாற்றப்பட்டு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜன. 26 தேதி) நடந்த குடியரசு தின விழாவில் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகவடிவேல், மேற்பார்வையாளர்கள் எம்.சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாராட்டு சான்றிதழில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமையை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்று வழங்கப்படுகிறது என்று இடம்பெற்றிருந்த வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் அன்றைய தினமே திரும்பப் பெறப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Amy9n8F
via

No comments