Breaking News

தமிழக அரசு சார்பில் புதிதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்

சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தின்படி, முதல்கட்டமாக பிப். 1, 2-ம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார்.

‘‘அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடிவரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. அதை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்வேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு கூட்டங்களிலும் வலியுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ND2l3rV
via

No comments