Breaking News

பல்வேறு பகுதிகளில் போராட்டம்: ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டின்பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் எதிரொலியாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம்தொடங்கியது. ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அவரது உரையில் சிலபகுதிகளை பேசாமல் தவிர்த்ததை சுட்டிக் காட்டி தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநருக்கு ஆதரவான குரல்களும் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AgkRHCG
via

No comments