பொங்கல் பரிசு தொகுப்புக்கு இன்று முதல் `டோக்கன்' விநியோகம் - ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவர்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவதற்கான ‘டோக்கன்’ இன்று (ஜன. 3) முதல் ரேஷன் கடை ஊழியரால் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KU2VMwD
via
No comments