Breaking News

மோடி அரசு மக்களை பிரித்தாளுகின்ற வேலையை செய்கிறது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையோடு கை கோர்ப்போம் என்ற மக்களை சந்திக்கும் ஒற்றுமை நடைபயணம் முத்தியால்பேட்டை தொகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்களை பிரித்து ஆளுங்கின்ற வேலையை பார்க்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXp6TOV
via

No comments