Breaking News

மீண்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் வந்த அதிமுக - மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி வாகை சூடுமா?

சேலம் மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பழனிசாமி. இவர் எம்ஜிஆர் காலத்திலேயே அதிமுகவில் இணைந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக பிளவுபட, ஜெயலலிதா அணியில் இபிஎஸ் இணைந்தார். 1989 சட்டப்பேரவை தேர்தலில், ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாகி சட்டப்பேரவைக்கு சென்றார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார்.

இதன் காரணமாக 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் இபிஎஸ்ஸை நிறுத்தி, எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு வந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. ஆனால் அவரால் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. இருப்பினும், சேலம் மாவட்டத்தில் திமுகவில் பலத்த செல்வாக்குடன் இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டு வந்தார். இதன்மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக வசமாக்கி ஜெயலலிதாவின் பாராட்டை பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FvrlRIu
via

No comments