Breaking News

பெரம்பூர் கொள்ளைக்கும் திருவண்ணாமலை கொள்ளைக்கும் தொடர்பா? - விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறை

திருவண்ணாமலை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் நேற்று அதிகாலை கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கால் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி, ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தனிப்படை காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை பயன்படுத்தி கொள்ளை கும்பல் தப்பித்து சென்றுள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UnPHawD
via

No comments