Breaking News

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சிசு உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும் சிசுவும் இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், உறவினர்கள் மருத்துவமனை முற்றுயிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (40). பட்டாசுத் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (30). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக முத்துமாரி பிரசவித்து ஆண் குழந்தை பெற்றார். ஆனால், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு உடல்நிலை கோளாறால் குழந்தை உயிரிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fy34DUL
via

No comments