Breaking News

டெண்டர் அறிவிப்பாணை விவகாரம் | சென்னை மாநகராட்சி மண்டல அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: சென்னை மணலியைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரரான மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர் பகுதியில் தொடக்கப் பள்ளி வகுப்பறைகள் மற்றும் மின்சாதன வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான டெண்டர் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஜன.25-ம்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க பிப்.2-ம் தேதி பிற்பகல்3 மணி வரை காலக்கெடு விதித்தும், பிப்.3-ம் தேதி டெண்டர்இறுதி செய்யப்படும் எனவும் அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.25லட்சத்துக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் இந்த இ-டெண்டரில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4h52Q9J
via

No comments