Breaking News

வெளிநாடுகளில் ரூ.110 கோடி முதலீடு - செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமாக சிமென்ட், ரியல் எஸ்டேட், சர்வதேச ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. செட்டிநாடு குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்நிலையில், செட்டிநாடு குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2015மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி பணம், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.700 கோடிவரி ஏய்ப்பு செய்ததும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H7vWtYC
via

No comments