Breaking News

காவலர் எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்வு உட்பட 101 அறிவிப்புகள் - சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட சட்டப்பேரவையில் 101 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 21 நாள் அலுவல்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bZ12u8H
via

No comments