Breaking News

புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ.670 கோடி வட்டி சுமை

சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளஅரசு ஊழியர்களை, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்காததால் கடந்த நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.670.36 கோடி வட்டிச்சுமை ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் மாநில அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும்கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் உள்பட) பங்களிப்புடன் கூடியஓய்வூதியத் திட்டம் (புதிய ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5DWuZqa
via

No comments