Breaking News

நாடு முழுவதும் சமூக நீதியை நிலைநாட்ட ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்: தேசிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாடு முழுவதும் சமூக நீதியை நிலைநாட்ட, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அது கூட்டுக் குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். இதையொட்டி, 2022 பிப். 2-ம் தேதி அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை அறிவித்தார். இதில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், கூட்டமைப்பின் முதல் மாநாடு டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. ‘சமூக நீதிப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் சமூக
நீதி இயக்கத்தின் தேசியத் திட்டத்தில் இணைவது’ என்பது மாநாட்டின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YfVD4J8
via

No comments