Breaking News

தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி ஏல அறிவிப்பில் இருந்து விலக்கு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையடுத்து, நிலக்கரி ஏல அறிவிப்பில் இருந்து டெல்டா மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளுக்கும் விலக்களிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்கங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ், 17-வதுமற்றும் 7-வது பாக ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8kxhZCg
via

No comments