Breaking News

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே?

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இரு அணிகளுமே தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் களமிறங்குகின்றன. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் 32 ரன்கள் வித்தியாசத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடமும் வீழ்ந்திருந்தன. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியானது சிஎஸ்கேவின் நம்பிக்கையை சற்று அசைத்து பார்த்துள்ளது. எனினும் அந்த அணி வீரர்களின் பார்ம், கடந்த ஆட்டங்களில் அவர்கள் வெளிப்படுத்திய செயல்திறன் எல்லாவற்றுக்கும் மேலாக சுழலுக்கு சாதகமான தனது கோட்டையில் களமிறங்குவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bRpxYWa

No comments