Breaking News

“திட்டங்களை செயல்படுத்துவதில் தஞ்சாவூருக்கு தான் முதல் உரிமை” - அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சாவூர்: பாபநாசத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியங்களிலுள்ள 252 கிராமங்களுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டி வைத்து கூறியது, "பாபநாசம் வட்டம், சருக்கை கிராமம், புதுக்குடி கொள்ளிடம் ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 15.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பாபநாத்தில் 21 ஊராட்சிகளும், அம்மாப்பேட்டையிலுள்ள 46 ஊராட்சிகள் என 252 கிராமங்களில் அமைக்கப்படவுள்ள 68 தரைமட்ட நீர்தேக்கத்தொட்டிகளுக்கு, 204.32 கி.மீ. நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் ஏற்றப்படவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m8eLxlW
via

No comments