Breaking News

நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன்தான்; நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார்மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அங்கு விவசாய நிலங்கள் இருப்பதால், ஏல அறிவிக்கை நடவடிக்கையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YcaJUxR
via

No comments