Breaking News

விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் - தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி

ராமநாதபுரம்: விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கவும், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும் வேண்டும் என ராமநாதபுரம் அருகே இயற்கை வேளாண்மை பண்ணையில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். நேற்றுமுன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனின் இயற்கை வேளாண்மை பண்ணைக்குச் சென்றார். அங்கு பயிரிட்டுள்ள பயிர்கள், நாட்டு மாடுகள், அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ohpWl1a
via

No comments