Breaking News

கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை - அரசியல் சட்டத்தை திருத்த வலியுறுத்தி முதல்வர் தீர்மானம்

சென்னை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், பட்டியலின மக்களுக்கான உரிமைகள், சலுகைகளை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பேரவையில் நேற்று இது தொடர்பாக அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியதாவது: ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பிறகும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடர்கிறது. அரசியல் சட்டப்படி, இந்து, சீக்கியர், புத்த மதம் தவிர்த்த பிற மதங்களை சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவராக கருதப்பட மாட்டார்கள். வரலாற்று ரீதியாக அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரி. அதன் மூலமாகவே அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக, சமூகரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த உரிமைகளை தர மறுப்பது சரியல்ல.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ri0IaH5
via

No comments