Breaking News

முத்ரா கடன் திட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் பொய் பிரச்சாரம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: முத்ரா கடன் திட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் பொய் பிரச்சாரம் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்ரா கடன் திட்டத்தின்கீழ் 8 ஆண்டுகளில் ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடன்களில் 83 சதவீதம், ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் இருப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, ரூ.19,25,600 கோடி தொகை, ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான அளவில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ரூ.50 ஆயிரம் கடனில் தற்போது என்ன தொழில்செய்ய முடியும் என்று யோசிக்கவைக்கிறது” என கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TLDAlJt
via

No comments