Breaking News

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் | இடைக்கால தடை பிறப்பிக்க மறுத்து ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுத் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வரும் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து மார்ச்28-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m4fxKiO
via

No comments