Breaking News

மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டங்களுக்கு மின்வாரியத்துக்கு ரூ.4,240 கோடி கடன் உதவி

சென்னை: மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டப் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.4,240 கோடி கடன் வழங்க மத்திய நிதி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டப் பணிகளை தமிழகத்தில் ரூ.10,600 கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இப்பணிக்கு மத்திய அரசு ரூ.6,360 கோடி கடன் வழங்கும். எஞ்சிய ரூ.4,240 கோடியை மத்திய நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்றுக் கொள்ள வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NZL4dPS
via

No comments