Breaking News

பர்ப்பிள் கேப் வென்ற துஷார் தேஷ்பாண்டே: ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, பர்ப்பிள் கேப் வென்றுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பந்து வீச்சாளர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதுவரை சென்னை அணிக்காக இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 33.2 ஓவர்கள் வீசி 369 ரன்கள் விட்டுக் கொடுத்து, 17 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் 76 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசி உள்ளார். இன்று (ஞாயிறு) சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அவர் பர்ப்பிள் கேப் வென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tY3QikL

No comments