Breaking News

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் | முதல் சுற்றில் இந்தியாவின் ஆஷிஷ் சவுத்ரி வெற்றி!

தாஷ்கந்து: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் இந்திய வீரர் ஆஷிஷ் சவுத்ரி. ஈரான் வீரர் மெய்சம் கெஷ்லாகியை அவர் வீழ்த்தினார். உஸ்பேகிஸ்தானில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

28 வயதான அவர் இமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே பவர்ஃபுல் பன்ச் கொடுத்து மெய்சம் கெஷ்லாகியை அதிரச் செய்தார். அதன் பலனாக 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2019-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவர் ஆஷிஷ். தற்போது 80 கிலோ எடைப்பிரிவில் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IvkTz4O

No comments