Breaking News

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம்: கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த கோலி

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி. நடப்பு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்த சதத்துடன் சேர்த்து மொத்தமாக 7 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி. இதன் மூலம் கிறிஸ் கெயிலின் ‘சத’ சாதனையை கோலி தகர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கெயில் மொத்தம் 6 சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சீசனில் விராட் கோலி 14 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 639 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 53.25. இதில் 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் உட்பட விராட் கோலி விளையாடும் ஒவ்வொரும் போட்டியிலும் அவர் சாதனை படைப்பது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1pRqb0G

No comments