Breaking News

இன்று தொடங்கவிருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கவிருந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வழியாக மே 8-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை நடைபெறும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fha6ZV
via

No comments