டைமண்ட் லீக் தடகளப் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். ஒலிம்பிக்கில் தங்கம், கடந்த மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்ததால் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2EACIVd
No comments