Breaking News

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீராங்கனை இளவேனிலுக்கு தங்கம்

ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இறுதிப்போட்டியில் அவர் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தப் பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gSoG18h

No comments