Breaking News

Tamil News Live Today: தொடர் மழை... வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மழை

அதே போன்று, வேலூர் மாவட்டத்திலும் தொடர்மழை காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



from India News https://ift.tt/G1FT0tC

No comments