வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகளுக்கு கரோனா பரிசோதனை

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே.2-ம் தேதி எண்ணப்படுகின்றன. தற்போது கரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Sc5RHn
via

No comments