Breaking News

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு பிறகு சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை சரிவு: அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வல்லுநர்கள் அறிவுரை 

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்த பிறகு சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் 2-ம் அலை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 31 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 2-ம் அலையில் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பூசியை பெரும் வரப்பிரசாதமாகக் கருதி, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையே நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகர் விவேக் தனது குழுவினருடன் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து 16-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக சென்னையில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 10 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதே நாளில் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aDaDE4
via

No comments