விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் தயாராகி ஓராண்டாக காத்துக் கிடக்கும் விநாயகர் சிலைகள்: வாழ்வாதாரம் இழந்த பொம்மை தொழிலாளர்கள்
கரோனா பரவல் காரணமாகதமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு கடந்த ஆண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளே இன்னும் விற்பனையாகாமல் உள்ளன. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில் பொம்மை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ளபகுதிகளில் பொம்மை செய்யும்தொழிலில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 25 தொழிற்கூடங்களும் உள்ளன. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் வைத்து வழிபட விநாயகர் சிலைகளை செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ftlBOY
via
No comments