Breaking News

ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு - ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

சென்னை: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரதியாரின் ஆள் உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்துவைத்தார்.

பாரதியார் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரதியார் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாரதியாரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் பரிசுகள் வழங் கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cqKlyLp
via

No comments