Breaking News

ஹீமோபிலியா மருந்து குறைந்த விலையில் கிடைக்க உதவ வேண்டும் - பத்மஸ்ரீ விருது பெறும் டாக்டர் நளினி கோரிக்கை

புதுச்சேரி: அதிக விலையால் நோயாளிகள் தவிப்பதால் ஹீமோபிலியா (Haemophilia) நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் தாராளமாக கிடைக்க பிரதமர் மோடி உதவ வேண்டும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட டாக்டர் நளினி கோரிக்கை வைத்துள்ளார்.

மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியைச் சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நளினி பார்த்தசாரதி, "புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக பணியை தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஹீமோபிலியா நோய் பாதித்து அவதிபட்டதை கண்டு இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்தேன். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஹீமோபிலியா மையத்தை கோரிமேட்டில் அமைத்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w9O6oMc
via

No comments