Breaking News

சிவகாசி அருகே பட்டாசு ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டல் - மூன்று மாதத்தில் பணிகள் முடியும் என தகவல்

சிவகாசி: சிவகாசி அருகே தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(நீரி) சார்பில் கட்டப்பட உள்ள பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நாக்பூரில் உள்ள நீரி மைய இயக்குனர் அதுல் வைத்யா ஆகியோர் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(நீரி) மற்றும் பட்டாசு உரிமையாளர்கள் இடையே பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த ஆய்வு மையம் அமைக்க கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்நதம் கையெழுத்து ஆனது. இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு ரூ.9 கோடியும். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கம்(டான்பாமா) சார்பில் ரூ.6 கோடி என ரூ.15 கோடி மதிப்பில் வேதிப்பொரும் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இந்த மையம் தற்போது தற்காலிகமாக ஆமத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3OzWbhR
via

No comments