Breaking News

தொழிலதிபர் வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு - நெரிசலில் 4 மூதாட்டிகள் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொழிலதிபர் வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் பெறுவதற்காக திரண்ட கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய 4 மூதாட்டிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஐயப்பன். இவர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் ஐயப்பன் ப்ளூ மெட்டல் (ஜல்லி கற்கள்) தொழில் செய்து வருகிறார். இவர் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறார். இதை வாங்க ஏராளமானோர் வருவதால், டோக்கன் வழங்கிய பிறகு, வேட்டி, சேலையை வழங்கி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T5Bfgqu
via

No comments