Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதிமுகவில் தொடரும் சலசலப்புகள்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும், பொதுக்குழு முடிவை அக்கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு முன்பின் ஏற்பட்ட சலசலப்புகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஓபிஎஸ்-இபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு: டெல்லி சென்று திரும்பிய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்தார். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nMu9VBI
via

No comments