Breaking News

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு ‘கீமோ போர்ட்’ கீமோதெரபி சிகிச்சை அறிமுகம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை ‘கீமோ போர்ட்’ கருவி என்ற கருவியை உடலில் பொருத்தி வழங்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கீமோதெரபி சிகிச்சை தென் மாவட்ட புற்றுநோயாளிகளுக்கு வரப்பிரதமாக உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சைத்துறையில் தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான புற்றுநோயாளிகள் சிகிச்சைப்பெற்று செல்கிறார்கள். தற்போது இந்த நோயாளிகளுக்கு கீமோதெரபி மருந்தை கீமோ போர்ட்(Chemoport) என்று சொல்லக்கூடிய உடலுக்குள்ளேயே பொருத்தக்கூடிய நவீன கருவிகளை கொண்டு சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் முதலாக 5 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/62KWw9B
via

No comments